தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி...
தமிழகத்தின் உள்ளூர் செய்திகள், மாவட்ட நிகழ்வுகள் மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள்.
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!!
மதுரை:
‘இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தாவிட்டால் இந்த அரசை தமிழ் சமுதாயம் மன்னிக்காது’ என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பொய்க்கால் குதிரை அரசு அமைந்து ஒரு மாதம் முடிவடையும் நிலையிலும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். 3 வயது பெண் குழந்தையைக்கூட சீரழிக்கும் அவல நிலை ஏற்பட் டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 3 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை கேட்போர் மனதை வேதனைக்குள்ளாக்கியது. ஒருசில வன்கொடுமைகளில் ஆளும் கட்சியினரே ஈடுபட்டுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
தூத்துக்குடி அருகே தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை, மதுரை திருமங்கலத்தில் 13 வயது சிறுமி, 4 சிறுவர்களால் வன்கொடுமைக்கு உள்ளான அவலம், கோவை, சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி படுகொலை என தமிழ்நாடே குற்ற பூமியாக மாறியுள்ளது.
இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய முதல்வரோ சினிமா வசனங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார். திருச்சியில் நன்றி அறிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு, அவரது தகுதியையும், தரத்தை யும் உணர்த்துகிறது.
இளம் தலைமுறையினர் தங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய படிப்பு, அவற்றை அடைவதற்கான வழிமுறைகள் போன்றவைகளுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர், போகாத ஊருக்கு வழிகாட்டும் வேலையை நடத்திக்கொண்டிருப்பது வெட்கக்கேடானது. ஒரு தலைமுறையே பாழாகும் சூழ்நிலை தற்போதைய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் எழுந்துள்ளது.
இளைய தலைமுறையினரை இந்த அரசு நல்வழிப்படுத்த வேண்டும். தவறினால் தமிழ் சமுதாயம் இந்த ஆட்சியாளர்களையும், ஆட்சியை வழிநடத்துவோரையும் மன்னிக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றிகளை தெரிவித்தார். இந்த நிகழ்வில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
YOUTUBE - களம் TV : சமீபத்திய வீடியோக்கள்
- "ஆளுமை இல்லை... தவெக திணறுகிறது!" வேலூர் இப்ராஹிம்
- கூடலூர் அரசு பள்ளிகளில் ஆய்வு!💥 மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு?💧 குடிநீர் தொட்டி சீரமைக்க உத்தரவு!
- 🔴 LIVE : சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அறிமுகம்🎙️ CM விஜய் தொடங்கி வைத்தார்! #viralnews #tvk
- பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- டிராக்டர் உடன் வந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம்
- 🚨 பெட்ரோல், டீசல் விலை உயர்வு! 😱 கோவையில் மாதர் சங்கம் கடும் போராட்டம்! Coimbatore Protest Today
- டிராக்டருடன் வந்த விவசாயிகள்! 😱 கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரடி போராட்டம்! #coimbatore #viralnews
- 💥 கோவையில் அதிரடி ஆலோசனை கூட்டம்! டாஸ்மாக் குறித்து வெளியான முக்கிய தகவல்! #tasmac #viralnews
- கோவைக்கு வருகை தந்த மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோவுக்கு உற்சாக வரவேற்பு
- கேமராவைத் திருப்பிவிட்டு...🚨 பஸ்ஸையே கொள்ளையடித்த ஜோடி!🚨 நள்ளிரவில் மினி பஸ்ஸில் அதிர்ச்சி